search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் புங்கையடி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
    X

    கோட்டார் புங்கையடி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

    • புனிதநீர் வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
    • ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாரில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை யொட்டி புனிதநீர் வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் எடுத்துச்செல்லப் பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதலில் கோவில் ராஜாகோபுரம் முலாலய கோபுரத்தில் விநாயகருக்கும், அடுத்து பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து மகா அபிஷேகம் செய்து தீபாராதனை, கோபூஜை நடத்தினர்.

    அப்போது கோவில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 6.30 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் புங்கையடி விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். கோட்டார் பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் புங்கையடி விநாயகர் கோவிலில் கடந்த 3 நாட்களாக நடந்த பூஜைகள், பண்ணிசை, கலை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலாளர் முருகப்பெரு மாள், பொருளாளர் டி.ரவி மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×