என் மலர்
உள்ளூர் செய்திகள்

குலசேகரம் புனித அகுஸ்தீனார் ஆலயத்தில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி
- காலை 9 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
- திருக்கொடியிறக்கம் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
திருவட்டார் :
குலசேகரம் புனித அகு ஸ்தீனார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி யேசுரெ த்தினம் தலைமை தாங்கி னார். புனித சவேரியார் நர்சிங் கல்லூரி இயக்குனர் ஜெயபிரகாஷ் மறையுரையாற்றினார். இத்திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை ஜோன்ஸ் கிளீட்டஸ் மற்றும் அருட்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பலியில் பங்கு அருட்பணி நிர்வாகிகள் மற்றும் சபை அமைப்புகள், கிளை பங்குகள் உள்பட திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
Next Story






