search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடையப்பன் குடியிருப்பு நாராயண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
    X

    உடையப்பன் குடியிருப்பு நாராயண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

    • நாளை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது
    • விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது.

    நாளை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உச்சி படிப்பும், மாலை 6 மணிக்கு பணிவிடையும், உகபடிப்பும், இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பஜனையும், நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகபடிப்பும், கிருஷ்ணன் பிறப்பும், திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (19-ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணி விடையும், உகப்படிப்பும், 8 மணிக்கு நாதஸ்வர இசையும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும் மாலை 5 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 6 மணிக்கு அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 8 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×