search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் - பெருமாள்புரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய அலங்கார தரை கற்கள்
    X

    கொட்டாரம் - பெருமாள்புரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய அலங்கார தரை கற்கள்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
    • புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் அலங்கார தரை கற்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்திடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து கொட்டாரம் பெருமாள்புரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், கொட்டாரம் பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருமாள்புரம் கிளை அ.தி.மு.க. செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஷ், ஊர்த்தலைவர் சுடலைமணி,செயலாளர் சந்திரகுமார், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கமால், கொட்டாரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் தங்ககுமார், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதாபாஸ்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சம்பூர்ண தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×