search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலப்புழா வழியாக இயக்கம் கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ஒரு வாரம் தாமதமாக புறப்படும்
    X

    கோப்பு படம் 

    ஆலப்புழா வழியாக இயக்கம் கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ஒரு வாரம் தாமதமாக புறப்படும்

    • சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
    • தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்சூர், இடப்பள்ளி, மாவேலிக்கரா மற்றும் கருநாகப்பள்ளி ரெயில் நிலைய எல்லைகளிலும், மாவேலிகரா-செங்கனூர் மற்றும் சாஸ்தான் கோட்டா கருநாகப்பள்ளி பிரிவு களிலும் தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ் பிரஸ் அக்டோபர் 18, 21,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவது காயங்குளம் சந்திப்பு மற்றும் ஆலப்புழா வழியாக எர்ணாகுளம் சந் திப்பு செல்லும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் நிறுத்தத்தைத் தவிர்க்கும்.

    அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    ரெயில் எண்:16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படுவது அக்டோபர் 15 முதல் 21 வரை (7 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து காலை 09.40 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக) புறப்படும்.

    ரெயில் எண்:16127 சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை (6 நாட்கள்) வழித்தடத்தில் 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×