கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு திருவிழா காலங்களில் தங்க-வைர நகைகளை அணிவிக்க நடவடிக்கை

அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவுரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து கட்ட அனுமதி கேட்பது
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு திருவிழா காலங்களில் தங்க-வைர நகைகளை அணிவிக்க நடவடிக்கை
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோ வில் களின் தலைமை அலுவ லகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், மருங்கூர் திருமலை முருகன் கோவில் உள்ளிட்ட சில முக்கிய கோவில்களில் பல ஆண்டு காலமாக திருவிழா காலங்களில் பயன்படுத்தப் படாமல் இருப்பு பெட்ட கத்தில் வைக்கப்பட்டு உள்ள தங்க, வைர நகைகளை திருவிழா காலங்களில் மீண்டும் சுவாமிகளுக்கு அணி விப்பதற்கு உரிய அனுமதி பெறுவது.

போதிய வருமானம் இன்றி குறைவான உண்டி யல்கள் இருக்கும் கோவில் களுக்கு கூடுதலாக அன்னதான உண்டியல்கள் வைக்க அனுமதி கேட்பது. திருக்கோ வில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் புதிதாக வணிக வளாகங்கள் கட்ட அனுமதி கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வேளிமலை முருகன் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து கட்ட அனுமதி கேட்பது என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com