என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு தங்ககாசு மாலை அணிவிப்பு
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு தங்ககாசு மாலை அணிவிப்பு

    • எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
    • பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன அப்போது அம்மனுக்கு பல்வேறு ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 150 பவுன் எடையுள்ள4 தங்ககாசு மாலை பகவதி அம்மனுக்கு அணிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதனை பகவதிஅம்மனுக்கு பவுர்ணமி தோறும் அணிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத பவுர்ணமியான நேற்று இரவு பகவதி அம்மனுக்கு தங்க காசு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் பிறகுபலவண்ண மலர்களால்பகவதிஅம்மனு க்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம்,நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மற்றும் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் குடும்பத்தினரும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×