search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலூர் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
    X

    பாலூர் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

    • வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர்.
    • மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து அவரின் வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர். பின்னர் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேல்பார்வையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்

    Next Story
    ×