என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பொற்றையடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நகைக்கடை டிரைவர்-முதியவர் பலி
    X

    பொற்றையடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நகைக்கடை டிரைவர்-முதியவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று இரவு வேலை முடிந்ததும் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் புறப்பட்டுள்ளார்.
    • அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வேலை முடிந்ததும் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் புறப்பட்டுள்ளார். பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் பகுதியில் அவர் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் கீழே விழுந்ததில் தலை உள்ளிட்ட இடங்களில் சுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுந்தரம் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (55). இவர் நேற்று இரவு வடலிவிளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×