search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுவுடமைவாதியாக திகழ்ந்த ஜீவானந்தம்
    X

    பொதுவுடமைவாதியாக திகழ்ந்த ஜீவானந்தம்

    • நாளை 117-வது பிறந்த தினம்
    • பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

    நாகர்கோவில் ;

    நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியினருக்கு 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி மகனாக பிறந்தார் ஜீவா. அவரது பெற்றோர் தங்கள் கிராம தெய்வமான சொரிமுத்து அய்யனாரின் பெயரையே சொரிமுத்து என மகனுக்கு சூட்டினர். பின்னர் அவர் பொதுவுடமை தலைவர் ஜீவானந்தமாக வாழ்க்கை தொடங்கினார்.

    9-ம் வகுப்பு படிக்கும் போதே காந்தியையும், கதரையும் மையப்படுத்தி ஜீவா கவிதை எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் காந்தி யடிகளால் "நீங்கள்தான் இந்தியாவின் சொத்து" எனப் பாராட்டப்பட்டவர். இளமை காலத்திலேயே வெள்ளையர்களை எதிர்த்துக் குரல் எழுப்பிய இவர், தந்தை பெரியாரின் பாசறையிலும் வளர்ந்தவர். காலப்போக்கில் கம்யூனிசக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு முழுநேரக் கம்யூனிசவாதியாக மாறிய ஜீவாதான், தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி.

    நாகர்கோவிலில் பிறந்த இவர் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் பகுதியை தமிழகத்துடன் இணைக்கப் போராடியதிலும் இவரது பங்களிப்பு பெரியது.

    காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் காந்தி ஆசிரமத்தைத் தோற்றுவித்தது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றது என காலத்தால் மறக்கமுடியாத வரலாறு களையும் தனதாக்கியவர். பகத்சிங்கின் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற நூலைத் தமிழாக்கம் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

    இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியா குமரியில் பிறந்தாலும் 1952-ல் சென்னை வண்ணா ரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஊக்க மளிக்காத தொழிற்சங்கங்க ளும், அவர் கலந்துகொள்ளாத தொழிலாளர் போராட்டங்க ளும் இல்லை. இப்படி பல்வேறு போராட்டங்களில் ஜீவா கலந்து கொண்டு பொதுவுடமை வாரியாக திகழ்ந்தார்.

    பின்னர் அவர் 1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஜீவா மறைந்தார். அவரது நினைவாக நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் சர்.சி.பி. ராமசாமி நினைவு பூங்காவில் ரூ. 12.98 லட்சம் மதிப்பில் பொதுவுடமை ஜீவா மணி மண்டபம் அமைத்துள்ளது தமிழக அரசு.

    1998-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழ மை, அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த மண்டபத்தில், ஜீவாவின் மார்பளவு சிலையும், அவரது புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபத்தின் முகப்பில் ஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அவரது செயல்பாடுகள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த மணி மண்டபமானது பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஜீவானந்தத்தின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படுகிறது. மேலும் அரசியல் கட்சி சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. ஜீவானந்தம் மணி மண்ட பத்திற்கு அனைத்து பொது மக்களும் வந்து செல்வதற்கு ஏற்றார்போல் தினமும் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். ஜீவானந்தத்தின் 117-வது பிறந்தநாள் வருகிற 21-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜீவனந்தத்தின் மணிமண்டபம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் மேல் ஆகிறது. இதனால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி மணி மண்டபத்தை புதுப்பித்து கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது.

    Next Story
    ×