search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுச்சூழலை பேணி காப்பது பொதுமக்கள் அனைவரின் கடமை
    X

    சுற்றுச்சூழலை பேணி காப்பது பொதுமக்கள் அனைவரின் கடமை

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுேகாள்
    • பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமள வில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர் மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள வயோதிகர் கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார் கள்.

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் தனது 23.10.2018-ம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன் படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

    பட்டாசுகளை வெடிப்ப தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரி கள், தேசிய பசுமை படை கள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவ னங்கள் மூலம் பொது மக்களிைடயே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலா ளர்கள் காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துணை இயக்கு நர், மாநகராட்சி ஆணையர் கள் மற்றும் உயர் அதிகாரி களின் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களி லும் விழிப்புணர்வு ஏற்ப டுத்த தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரிய மூலம் தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக் டர்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டா சுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்ப தற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சி யாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், பள்ளிகள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங் களுக்கு அருகில் பட்டாசு களை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யத்தால் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றம் தனது ஆணையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப் பிட்டுள்ள பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என வும் அறிவுறுத்தியுள்ளது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத் தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×