search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கோட்டாரில் புரோட்டா கடைக்குள் புகுந்து ரூ.12 ஆயிரம் கொள்ளை
    X

    நாகர்கோவில் கோட்டாரில் புரோட்டா கடைக்குள் புகுந்து ரூ.12 ஆயிரம் கொள்ளை

    • மேல்கூரையை பிரித்து உள்ளே புகுந்து கைவரிசை
    • கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஈத்தாமொழி சந்திப்பில் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் காலையில் டீக்கடையும், மாலையில் புரோட்டா கடையும் செயல்பட்டு வருகிறது.

    புரோட்டா கடையை வாகையடி தெருவை சேர்ந்த அர்ஜுனும் டீக்கடையை ஆறுமுகம் நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு அர்ஜுன் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். வழக்கம்போல் ஆறுமுகம் காலையில் கடையை திறக்க இன்று வந்தார்.

    கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. கடையின் மேல் கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வர வழைக்கப்பட்டனர். அவர் கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    அர்ஜுன் நள்ளிரவு கடையை பூட்டிக்கொண்டு சென்ற பிறகு கொள்ளை யர்கள் கடையின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரி மூட்டைகள் மேல் ஏறி கடையின் மேல் கூரை பிரித்து உள்ளே புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×