search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனை ஓலை, வாழைநாரால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் - கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார்
    X

    பனை ஓலை, வாழைநாரால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் - கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார்

    • ரூ.8.5 லட்சம் மதிப்பிலான கடனுதவியுடன் ஜீனியா மகளிர் சுய உதவிக்குழு
    • பல்வேறு கைவினைப் பொருட்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகர்கோவில், ஏப்.20-

    குமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான கடனுதவியுடன் ஜீனியா மகளிர் சுய உதவிக்குழுவால் பனை ஓலை மற்றும் வாழை நார்களால் உருவாக்கப்பட்ட பழக்கூடை, மசாலாப்பெட்டி, எழுதுப்பொருள் வைப் பதற்கான பெட்டி, உணவுக் கூடை, அர்ச்ச னைப்பெட்டி, காய்கறி கூடை, குப்பைகள் வைப்ப தற்கான பெட்டி, தொப்பி, வாழைநாரால் உருவாக் கப்பட்ட குழந்தை களுக்கான ஆடை, மணப் ண்ணுக்கான அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி பில்லர் மருத்துவமனை அன்னை நகர் பகுதியில் கொட்டாங் குச்சி வாயிலாக உரு வாக்கப்பட்ட அகப்பை, டீ கப், கலைப்பொருட்கள், ஜூஸ் கப், சூப் கிண்ணம், ஐஸ்கிரீம் கிண்ணம், வளை யல்கள், மாலைகள், மோதிரங்கள், பேனா உள்ளிட்ட 200-க்கும் மேற் பட்ட கைவினைப் பொருட்கள் உரு வாக்கப் பட்டுள்ளதை நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

    உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கலைச் செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைக்குழு மேலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×