search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் லாரி மோதி மளிகை கடை ஊழியர் சாவு - டிரைவர் கைது
    X

    தக்கலையில் லாரி மோதி மளிகை கடை ஊழியர் சாவு - டிரைவர் கைது

    • செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ஆறுமுகராஜ் என்பவரை கைது செய்தனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி ஒற்றை தெருவை சேர்ந்தவர் செல்வன் (வயது 48).

    இவர் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

    அவர் தபால் நிலையம் அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வன் படுகாயம் அடைந்தார். அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு செல்வன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இது சம்பந்தமாக அவரது சகோதரர் ராஜன், தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சங்காங்கடையை சேர்ந்த ஆறுமுகராஜ் (60) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×