search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பட்டதாரி பெண் மாயம்
    X

    நாகர்கோவிலில் பட்டதாரி பெண் மாயம்

    • சம்பவத்தன்று சத்யா வீட்டில் இருந்து துணி எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வாகையடி மேலரத வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் சத்யா (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று சத்யா வீட்டில் இருந்து துணி எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதை யடுத்து சத்யாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சத்யா கிடைக்கவில்லை. அவரது தாயார் மாரியம்மாள் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள். அவரது செல்போன் டவர் உதவி யுடன் சத்யாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×