search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் பூக்கள் விலை குறைவு
    X

    தோவாளையில் பூக்கள் விலை குறைவு

    • ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை
    • இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம், ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலம் பகுதியில் இருந்து அரளிப்பூவும், தோவாளை, ராஜாவூர், மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளிப்பூவும், சம்மங்கி, கோழி கொண்டை, அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. ஆடி மாதம் என்பதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது.

    பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு வருமாறு:-

    பிச்சிப்பூ ரூ.600, மல்லிகைப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.125, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டரோஸ் ரூ.110, மஞ்சள் கிராந்தி ரூ.60, சிவப்பு கிராந்தி ரூ.70 என அனைத்து பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வருகிற 19-ந்தேதி முதல் கேரளா முழுவதும் ஓணம் கொண்டாட இருப்பதால் பூக்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×