search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா
    X

    தோவாளை முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா

    • பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை நடைபெறும்
    • அனைத்து விதமான மலர்கள் கொண்டு மலர் முழுக்கு தொடங்குகிறது.

    தோவாளை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள்(11-ந்தேதி) மலர் முழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 54-வது மலர் முழுக்கு விழாவை முன்னிட்டு அதிகாலையில் காக்கும் விநாயகர் கோவி லில் கணபதி வேள்வி நடத்தப்படு கிறது. தொ டர்ந்து சுப்ரமணிய சுவா மிக்கு திருநீர் முழுக்கு நடக்கிறது.

    இதை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்பு பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு அனைத்து விதமான மலர்கள் கொண்டு மலர் முழுக்கு தொடங்குகிறது.

    நள்ளிரவு முருகப்பெரு மான் தோகை மயில் முருகப் பெருமானாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன் பின்பு அருள்பிரசாதம் வழங்கப்படும். நிகழ்ச்சியை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மலர் முழுக்கு ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.

    Next Story
    ×