search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா

    • திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஐப்பசி பவுர்ணமி விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி அதி காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ்ந்ததால் அன்று இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து அன்று இரவு நடக்க இருந்த மலர்முழுக்கு விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, அரளி, கொழுந்து, துளசி, தாமரை, மரிக்கொழுந்து உள்பட பலவகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபி ஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருள செய்து கோவி லின் உள் பிர காரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்கா வலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், துளசிதரன் நாயர், சுந்தரி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.

    Next Story
    ×