search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா

    • எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
    • மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவு ர்ணமி அன்று பவுர்ணமி விழா கொண்டா டப்படு வது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஆவணி பவுர்ணமி விழா கோலாக லமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, துளசி, கேந்தி, தாமரை உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்தி ரன் உள்பட திரளான பக்த ர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்த னர். இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்ல க்கில் எழுந்தருள செய்து கோவிலின்உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாள பூஜையும். ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×