என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா கும்பல்களுக்கு இடையே பயங்கர மோதல்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட் டத்தில் கஞ்சா கும்பல்களை ஒழிக்க ேபாலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கன்னியாகுமரி சுனாமி காலனியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் சுனாமி காலனியை சேர்ந்த ஆக்னல் (வயது20) என்ற வாலிபரை, எதிர் தரப்பை சேர்ந்த ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் தப்பிய அந்த கும்பல், கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் பகுதி யில் உள்ள ஒரு வங்கி முன்பு வந்து நின்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் அனுப்ப கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த மீனவர் மோகன் தாஸ் என்பவர் வந்தார்.
அவரை கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆக்னல், மோகன்தாஸ் ஆகிய இருவரும் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த இருவர்களிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அப்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆக்னல் மற்றும் மோகன் தாஸ் இருவரையும் மீண்டும் தாக்க வந்த ஜெப்ரினை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்று கீழே விழுந்து காயமடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக கன்னியா குமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு கஞ்சா போதையில் இருந்த அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மிரட்டல் விடுத்து பேசி ரகளையில் ஈடுபட்டார். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்