search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பப்பூ பருவ பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    கும்பப்பூ பருவ பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    • டிச.15 கடைசி நாள்
    • கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ.35,400 ஆகும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசா யிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகா க்கவும் பண்ணை வருவா யை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழி ல்நுட்பங்களை கடை பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2023-ம் ஆண்டில் கன்னியா குமரி மாவட்ட கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விதைக்க இயலா மை மற்றும் விதைப்பு பொய்த்து போகும் பயிர்க ளுக்கு காப்பீடு செய்திட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில், கன்னி யாகுமரி மாவட்டத்தில் 11 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்ட த்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூ ரன்ஸ் கம்பெனி லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் காமன் சர்வீஸ் சென்டர் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறாக கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15, 2023 ஆகும்.

    எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசா யிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகை செலு த்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட் டுக் கொள்ளப்படு கிறார்கள். பயிர் காப்பீட்டு த்தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொ ழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண த்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும், பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ.35,400 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவி க்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது என்பதால் விவசாயிகள் கும்பப்பூ பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் கலந்துகொண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×