search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
    X

    குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.
    • 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில், செப்.26-

    குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 21.50 அடியாக இருந்தது.

    அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 434 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் 634 கன அடி தண்ணீரும் சானல் களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. சானல்களிலும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதை யடுத்து விவசாயிகள் சாகு படி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம் பகுதிகளில் ஏற்கனவே நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை யடுத்து அவர்களுக்கு தேவை யான விதை நெல் களை தங்குதடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகு படி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

    Next Story
    ×