search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அலைதடுப்பு சுவர் நீட்டிக்கும் பணி
    X

    தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அலைதடுப்பு சுவர் நீட்டிக்கும் பணி

    • அலைதடுப்பு சுவர் பணிக்கு தினசரி 40 லோடு கற்கள் கொண்டு வரப்படுகிறது.
    • இந்த பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் மீன்பிடி துறை முகம் உள்ளது.

    இப்பகுதியில் இருந்துகடலுக்கு செல்லும் மீனவர்கள் அடிக்கடி அலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன.எனவே இங்குள்ள அலைதடுப்பு சுவரை நீட்டித்து தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களின் கோரிக்கைப் படி தேங்காய்பட்டினம் பகுதியில் அலைதடுப்பு சுவர் நீட்டிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அரசு அறிவித்துள்ள முறைப்படிதான் நடை பெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு தேங்காய்பட்டினம் சென்றனர்.

    அங்கு நடந்த ஆய்வில் அலைன்மென்ட் சரிபார்க்க ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது, இது குறித்து தலைமை பொறியாளர் கூறும்போது, அலைதடுப்பு சுவர் பணிக்கு தினசரி 40 லோடு கற்கள் கொண்டு வரப்படுகிறது. இதனை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த பணிகள் அரசால் ஒப்பளித்தபடி தான் நடக்கிறது. இதனால் மீனவர்கள் கவலைப்பட தேவையில்லை, என்றார். மேலும் இந்த பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாகர்கோவில் மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறை முக திட்ட உபகோட்ட உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் மற்றும் உதவி செயற்பொறியா ளர்கள் சுடலையாண்டி, மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×