search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கான்கடை தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் சர்வதேச மாநாடு
    X

    சுங்கான்கடை தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் சர்வதேச மாநாடு

    • சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு
    • ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை சார்ந்த சிவில் என்ஜினீயரிங் துறை தலைவர் ரமேஷ், மலேசிய சர்வதேசிய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் அப்துல் மன்னன், தொழில்நுட்ப ஆராட்சி கவுண்சிலின் முதன்மை விஞ்ஞானி ராஜன் மற்றும் மார்க் ஐ.பி. சர்விஸ் நிர்வாக அதிகாரி ஆறுமுகம் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இம்மாநாட்டில் சுற்றுசூழலின் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர் மகேஷ்வரன் மற்றும் நிதிகாப்பாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாநாட்டு செயலர்கள் ஜெர்லின் ரெஜின், சுகாசினி மற்றும் ஜட்சன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவில் மற்றும் வேதியல் துறை ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×