search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையாற்றை மீட்டெடுத்தால் குடிநீர் பிரச்சினை தீரும் - கலெக்டர் ஸ்ரீதர் உறுதி
    X

    பழையாற்றை மீட்டெடுத்தால் குடிநீர் பிரச்சினை தீரும் - கலெக்டர் ஸ்ரீதர் உறுதி

    • விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரமும் கிடைக்க பெறும்.
    • புல அள வீட்டுப் புத்தகத்தின் அடிப்படையில் அளவீடு செய்து பழையாற்றின் எல்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்,

    நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பழையாற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வறிக்கை யினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தின் பழம் பெருமை வாய்ந்த பழை யாற்றின் அமைப்பினை மீட்டு எடுக்க வேண்டும். பழையாறு மீட்ெடடுக்கும் முன்னெடுப்பில் மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதலின்படி பலருடைய பங்களிப்புடன் புல அள வீட்டுப் புத்தகத்தின் அடிப்படையில் அளவீடு செய்து பழையாற்றின் எல்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் நதியைக் கள ஆய்வு செய்து நதியின் தற்போதைய நிலை மற்றும் நதி சந்திக்கும் சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.டி.பி.ஜி.எஸ். தொழில் நுட்பம் மூலம் புவியியல் தகவல் அமைப்பை ஆய்வு செய்து துல்லியமாக நதியின் டிஜிட்டல் வரை படம் உருவாக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நதிகளை சீரமைப்பதன் வாயிலாக நமது மாவட்டத் தின் பழமையை மீட்டெ டுப்பது மட்டு மல்லாமல், விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரமும் கிடைக்க பெறும். மேலும் குடிநீர் ஆதாரத்திற்கும் வழி வகுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில மெடுப்பு) ரேவதி, பொறி யியல் கல்லூரி முதல்வர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×