search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீன பட்டாசுகள் விற்பனை செய்ய வேண்டாம்
    X

    கோப்பு படம் 

    சீன பட்டாசுகள் விற்பனை செய்ய வேண்டாம்

    • பட்டாசு கடைகளில் வேறு பொருட்களை விற்க கூடாது
    • கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் பட் டாசு பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற் பனை செய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர் களை பணியில் அமர்த்த கூடாது.பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்கு கள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை பொதுமக்கள் அறியும் வகையில் கடை யில் வைப்பதுடன் அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்க கூடாது.

    மின்தடை ஏற்படும் பட் சத்தில் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப் பாக பயன்படுத்த கூடாது. டார்ச், பேட்டரி விளக்கு களை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். உதிரி பட்டா சுகளை விற்பனை செய் வதை தவிர்க்க வேண்டும். கடையை மூடும்போது அனைத்து மின் இணைப் புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப் பற்றக்கூடிய பெயின்ட், எண்ணெய் மற்றும் காகி தங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகி லோ சேமித்தல் கூடாது.உரிமம் பெறப்பட்ட கட்டி டத்தில் மட்டுமே பட்டா சுகளை விற்பனை செய்ய வேண்டும்.

    பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது. அவ்வாறு தயார் செய்வது கண்டறியப்பட் டால் வெடி பொருள் சட்ட விதிகளின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட் டாசுகள் விற்பனை செய் யக்கூடாது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×