search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவு நாளையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி - குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் அறிக்கை
    X

    கருணாநிதி நினைவு நாளையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி - குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் அறிக்கை

    • 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக, எழுத்தாளராக , கவிஞராக, இலக்கியவாதியாக, தலைசிறந்து விளங்கிய தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. வடசேரி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக பொன்னப்ப நாடார் திடலில் அமைக்கப் பட்டிருக்கும் கருணாநிதி திருஉருவ படத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர். ஆகவே கழகத்தின் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் .

    மேலும் தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×