என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நினைவு நாளையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி - குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் அறிக்கை
- 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
- கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் :
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக, எழுத்தாளராக , கவிஞராக, இலக்கியவாதியாக, தலைசிறந்து விளங்கிய தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. வடசேரி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக பொன்னப்ப நாடார் திடலில் அமைக்கப் பட்டிருக்கும் கருணாநிதி திருஉருவ படத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர். ஆகவே கழகத்தின் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் .
மேலும் தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்