search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்த தி.மு.க. நிர்வாகிகள்
    X

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்த தி.மு.க. நிர்வாகிகள்

    • தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ஊட்டுவாழ் மடம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிரவாகிகள் சந்துரு, ராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், இளைஞரணி செயலாளர் அட்சயா கண்ணன், மண்டல செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, முருகேஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் வைகுண்ட மணி நிர்வாகிகள் வேலாயுதம், வெங்கடேஷ், ரபீக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    Next Story
    ×