என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் 6¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது
- குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ரத்தசோகையில் உடல் சோர்வு ஏற்பட்டு செயல்திறன் குறைவாகும்.
மேற்கண்ட குறைபாடுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.
நாளை (17-ந்தேதி) 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித்துறை ஊட்டச்சத்துதுறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்று திறனாளிகள்துறை, சமூக பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம், மற்றும் ஊரகவளர்ச்சித்துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது உள்ள கல்லூரி செல்லா பெண்களுக்கு, ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும். நமது மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 5,58,766 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 75,043 பேரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் அன்று உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு வருகிற 24-ந்தேதி மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்