search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம்
    X

    சுசீந்திரம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம்

    • பொன்னையா ரோஸ்லி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
    • இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. அதன் பிறகு அவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் மறுகால்தலையை சேர்ந்தவர் பகவதி முருகன். இவருடைய மனைவி பொன்னையா ரோஸ்லி (வயது 57). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக கடந்த 6 மாதமாக தாயார் வீட்டில் சிகிச்சை பெற்ற அவர் சில தினங்களுக்கு முன்பு தான் மறுகால் தலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஆனால் கடந்த 2 நாட்களாக பொன்னையா ரோஸ்லி வீடு திறந்து இருந்தது. ஆனால் அவர் வெளியே வரவில்லை.

    இதனால் அருகில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பொன்னையா ரோஸ்லி இறந்து கிடந்தார்.

    இது குறித்து அவரது தம்பி செல்லத்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. அதன் பிறகு அவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்.

    Next Story
    ×