search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேக்கோடு அரசு பள்ளியில் குறுக்கு நாட்டு ஓட்டப்பந்தயம்
    X

    மேக்கோடு அரசு பள்ளியில் குறுக்கு நாட்டு ஓட்டப்பந்தயம்

    • பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர்.
    • ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குறுக்கு நாட்டு ஓட்டப்பந்தயம் நடந்தது. முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு தனித்தனியாக நடந்த இந்த பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர். முதுநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தொடங்கி வைத்தார். முதுநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை குழித்துறை ஜே.சி.ஐ. தலைவர் பெகின் தொடங்கி வைத்தார்.

    இளநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வன்னியூர் ஊராட்சி தலைவி பாப்பா தொடங்கி வைத்தார். இளநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெஜி தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ் மாணவர்களை ஒருங்கிணைத்து ஓட்டப்பந்தய ஏற்பாடுகளை செய்திருந்தார். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.எம்.சி. தலைவர் மினி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×