search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    X

    ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

    • பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளிருப்பில் கலந்து கொண்டனர்.
    • ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குளச்சல் :

    குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    வார்டு கவுன்சிலர்களும் சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கவுன்சிலர்கள் பிராங்கி ளின், ஷோபா, சுசீலா, சிந்து, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அவர்களிடம் செயல் அலுவலர் சங்கர் கணேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். இரவு ஆகியும் தீர்வு ஏற்பட வில்லை.

    இதனால் கவுன்சிலர்கள் நேற்றிரவு முழுவதும் உள்ளிருப்பில் ஈடுப்பட்டனர். பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளி ருப்பில் கலந்து கொண்டனர்.

    இன்று காலையும் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.இவர்களுடன் பேரூராட்சி தலைவர் எட்வின்ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன், 14-வது வார்டு கவுன்சிலர் ஷீலா ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இவர்கள் வார்டுகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.2- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையில் ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி குழாயை சேதப்படுத்தி சிலர் திருடி சென்றதாக, செயல் அலுவலர் சங்கர் கணேஷ், குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    Next Story
    ×