search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரகனி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பரமசிவம் கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற பிறகும் அவரது உடல்நிலை சரியாக ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×