search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாணவ-மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஓட்டம் - கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
    X

    இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாணவ-மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஓட்டம் - கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழிப்புணர்வு ஓட்டமானது செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    நாகர்கோவில் :

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி 1-1-2023-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இளம் வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான தேர்தல் விழிப்புணர்வு ஓட்டம் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அரவிந்த் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஓட்டமானது செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. விழிப்புணர்வு ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ், தேர்தல் தாசில்தார் சுசீலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×