search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூல்

    • கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன.
    • ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன.

    இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டி யல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. நிரந்தர உண்டி யல்கள் கடந்த மாதம்30-ந்தேதி திறந்து எண்ணப்ப ட்டது.

    இந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு 17 நிரந்தர உண்டியல்களும் குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ரத்தின வேல்பாண்டியன், குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்ரா ஜேஷ்கு மார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கணக்கர் கண்ணதாசன் பொருளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை திறந்து எண்ணப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாவர்கள், குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திசெவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்ட னர். இந்த உண்டியல் மூலம் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 939 வசூலானது. மேலும் ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தன.

    Next Story
    ×