search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூரைமேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்
    X

    கூரைமேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

    • குமரி மாவட்ட முந்திரி தொழிலாளர் சங்கத்தினர் அமைச்சர் மனோதங்கராஜிடம் வலியுறுத்தல்
    • 2 ஆண்டு களுக்கு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

    தக்கலை, நவ.9-

    குமரி மாவட்ட முந்திரி தொழிற்சாலை உரிமை யாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரெஜின் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கையான 430 சதம் நிலைக்கட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும்.

    பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும் . கூரைக்கு மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணம் முழுமையும் ரத்து செய்திட வேண்டும்.மின்சார வாரியத்தால் தவறாக அவசர கோணத் தில் தயாரிக்கப்பட்டு தொழில் துறையினரின் மேல் திணிக்கப்பட்ட கட்டணத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும்.தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டு களுக்கு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை கள் நிறைவேற்றி தொழில் புரிவதற்கும், தொழில்களை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தமிழ்நாட்டின் குறு சிறு தொழில்கள் பாதுகாக்கபட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×