search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரத்தில் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும் - வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
    X

    பார்வதிபுரத்தில் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும் - வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

    • போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் வகையில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது
    • நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் கோட்டார் பஜாருக்கு அடுத்த படியாக பார்வதிபுரம் பஜார் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் வகையில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது .

    தற்பொழுது அந்த பகுதி யில் கடை வீதிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்கள் பார் வதிபுரம் பாலத்தின் கீழ் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங் களில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக அந்த பகுதியில் இருசக்கர மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்தது வியாபாரிகள் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அந்த பகுதியில் இருந்து திருடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வத்தை தடுக்கும் வகை யில் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதே போல் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியிலும் சி.சி.டி.வி. காமிரா அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×