என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் புதுப்பெண்ணை தாக்கிய கணவன்-மாமனார் மீது வழக்கு
    X

    நாகர்கோவிலில் புதுப்பெண்ணை தாக்கிய கணவன்-மாமனார் மீது வழக்கு

    • சம்பவத்தன்று பண பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது
    • இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 2 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம் பிரதாப் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலேஸ்வரி (37). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டிற்கு சென்ற ராம் பிரதாப் தற்போது ஊருக்கு வந்துள்ளார். கணவன்-மனைவிக்கி டையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பண பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ராம் பிரதாப் மனைவி அகிலேஷ்வரியை தாக்கியுள்ளார். மேலும் அவரது தந்தை செல்லத்துரை மருமகளை பேசியதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த அகிலேஸ்வரி நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.

    இது குறித்து அகிலேஸ்வரி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராம் பிரதாப், மாமனார் செல்லத்துரை மீது இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 2 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×