search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதிகளை மீறிய 100 வாகனங்கள் மீது வழக்கு
    X

    போக்குவரத்து விதிகளை மீறிய 100 வாகனங்கள் மீது வழக்கு

    • தக்கலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • போதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் தக்கலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.

    அப்போது குமார கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 43) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீ சார் பிடித்து சோதனை செய்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதியானது.

    உடனே அவர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியது, வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 வாகனங்கள் மீது வழக்கு பதிவுசெய்து ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தக்கலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை போதையில் வாகனம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×