search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாடு கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது
    X

    மணப்பாடு கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது

    3 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.

    குளச்சல் :

    குளச்சலை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 25-ந்தேதி 16 மீனவர் கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.

    அவர்களை மீனவர்களும் கடற்படையினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மீனவர் பயஸ் பிணமாக மீட்கப்பட்டார். 10 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர் ஆன்றோ உடல் மீட்கப்பட்டது.

    ஆரோக்கியம் கதி என்ன? என்று தெரியாத நிலை நீடித்தது. இந்நிலையில் நேற்று மாலை ராமேசுவரம் அருகே உள்ள நடுத்துறை பகுதியில் ஒரு உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஆரோக்கியத்தின் உறவினர்கள் ராமேசுவரம் சென்றனர்.

    இதற்கிடையில் கரை ஒதுங்கிய உடலை ராமேசு வரம் கடலோர காவல் படையினர் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அந்த உடல் ஆரோக்கியம்தான் என்பது உறுதியானது. அவரது கையில் ஏற்கனவே பிளேட் பொருத்தி இருந்ததன் மூலம் உடல் அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.

    Next Story
    ×