search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
    X

    நாகர்கோவிலில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி

    • சைக்கிள் போட்டியை கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    அண்ணா பிறந்த நாளையொட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி இன்று நடந்தது. புத்தேரியில் இருந்து அப்டா மார்க்கெட் வரும் அணுகு சாலையில் இந்த போட்டி நடைபெற்றது. 13 வயதிற்குள்ளான மாண வர்களுக்கு 15 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டரும், 15 வயதிற்குள்ளான மாணவர்க ளுக்கு 20 கி.மீட்டரும், மாணவி களுக்கு 15 கி.மீட்டரும், 17 வயதிற்குள்ளான மாணவர்களுக்கு 20 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 20 கி.மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 13 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ரெனோ முதல் பரிசையும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெய்வன் அன்டேல் இரண்டாம் பரிசையும், கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரால்டு சேம் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

    13 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவி அன்லின் லிரின்டே முதல் பரிசையும், முக்குலம்பாடு புனித போலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷிகா இரண்டாம் பரிசையும், நாகர்கோவில் பிஷப் ரெமிஜூஸ் பள்ளி மாணவி தேஜா மீனாட்சி மூன்றாம் பரிசையும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகில்ராம் முதல் பரிசையும், காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ஜெயந்த் குமார் இரண்டாம் பரிசையும், ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுவின் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் வெட்டூர்ணி மடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவிகளான சுருதி முதல் பரிசையும், ஆர்த்தி இரண்டாம் பரிசையும், அஸ்மிதா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

    17 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஸ்ரீமஞ்சு நாதன் முதல் பரிசையும், ஸ்ரீமஞ்சு தேவன் இரண்டாம் பரிசையும், கென்னி தாமஸ் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவிகளான ஆஸ்மி முதல் பரிசும், ஆன்சி இரண்டாம் பரிசையும், வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவி ஜெனிட்டா மூன்றாம் பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வுபெற்ற முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஓய்வு) விஜயகுமாரி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×