search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மகள் பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்
    X

    கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மகள் பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்

    • கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வரவேற்றார்.
    • டியூரப்பாவின் மகள் பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் பத்மாவதி தனது கணவர் விருபாட்சாவுடன் நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவரை நாகர்கோவில் தேவசம்தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வரவேற்றார்.

    பின்னர் எடியூரப்பாவின் மகள் பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ள பகவதி அம்மன் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    Next Story
    ×