search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மீண்டும் பேட்டரி கார் சேவை
    X

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மீண்டும் பேட்டரி கார் சேவை

    • கன்னியாகுமரியிலும் இயக்க நடவடிக்கை
    • நாளை முதல் தொடக்கம்

    நாகர்கோவில் :

    தென்னக ரெயில்வே யில் ஏ கிரேட் அந்தஸ்தில் நாகர்கோவில் ரெயில் நிலையம் உள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தி லிருந்து சென்னை, கோவை போன்ற பெரு நகரங் களுக்கும், மும்பை, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர் களுக்கு செல்வதற்கு ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக மாலை நேரங்களில் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட மாலையில் வெளி யூருக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப் படும். இந்த ரெயில் நிலை யத்தில் முதலாவது பிளாட் பாரத்தில் இருந்து இரண் டாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு எக்ஸ்லெக்டர் வசதி மட்டும் உள்ளது. மேலும் ரெயில் நிலை யத்தில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பேட்டரி கார் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பேட்டரி காரை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தி னரும் சட்டமன்ற உறுப்பி னர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

    பேட்டரி கார் வசதி இல்லாததால் ரெயில் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கும் முதிய வர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். ரெயிலை விட்டு இறங்கி நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் மீண்டும் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் பிறப பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2 பேட்டரி கார்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. பயணிகளின் நலன் கருதி ரெயில்வே பிளாட் பாரங்களில் பேட்டரி கார் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    நாளை (6-ந்தேதி) முதல் பிளாட்பாரத்தில் பேட்டரி கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    மேலும் பேட்டரி காருக் கான கட்டணத்தை நிர்ண யம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தை பேட்டரி காருக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவில் ரெயில்வே யில் பேட்டரி கார் இயக்கப் படும்போது ரெயில் பயணி களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரு நகரங்களுக்கு ஈடாக நாகர்கோவிலில் பேட்டரி கார் இயக்கப்படுவது பயணி களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் சர்வதேச சுற்றுலா தலமாக கருதப்ப டும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் பேட்டரி கார் வசதி இல்லாமல் சுற்று லா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெளி மாநி லங்களில் இருந்து வரும் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் பயணிகளும் அவதிப்பட்டு வருவதால் பேட்டரி கார் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டது. இங்கும் பேட்டரி காரை இயக்குவதற்கு டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 பேட்டரி கார்களை கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவிலில் டெண் டர் எடுத்த அதே நிறுவனமே கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் பேட்டரி கார் இயக்க டெண்டர் எடுத்துள்ளது. அங்கும் ஓரிரு நாட்களில் பேட்டரி கார் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகை யில், நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே தனியார் மூலம் பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. அதற்கான ஒப்பந்த காலம் நிறைவடைந்தது பிறகு பேட்டரி கார் இயக்குவது நிறுத்தப்பட்டது.

    தற்பொழுது நாகர்கோ வில், கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரே நிறுவனமே அதற்கு டெண்டர் எடுத்துள்ளது.

    நாகர்கோவிலில் இயக்கு வதற்கான பேட்டரி கார் கொண்டு வந்துள்ள நிலை யில் நாளை முதல் அந்த பேட்டரி காரை இயக்க நடவடிக்கை எடுக்கப் படும். அதற்கான கட்ட ணத்தை காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனமே முடிவு செய்யும் என்றார்.

    Next Story
    ×