search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
    X

    குழித்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

    • நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • அதிகாரிகள் ரூ.5,500 அபராதம் விதித்தனர்

    கன்னியாகுமரி:

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மக்கா பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் உத்தரவின் பேரில் குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்றுஅதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வெட்டுமணி பகுதியில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.5,500 அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று பிளாஸ்டிக் பைகள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.

    Next Story
    ×