search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழையில் இலைப்புள்ளி நோயை தடுக்கலாம் - அதிகாரி தகவல்
    X

    வாழையில் இலைப்புள்ளி நோயை தடுக்கலாம் - அதிகாரி தகவல்

    • வாழை சிகடோகா இலைப் புள்ளி நோயின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
    • சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தோட்டக் கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டாரத்தில் ஊரக்கோணம் மற்றும் ஞாலம் பகுதிகளில் வாழை சிகடோகா இலைப் புள்ளி நோயின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

    இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறமடைகின்றது. பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின்னர் இலை காய்ந்து சருகாகின்றது. இதனால் ஒளி சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது.

    அதிகம் பாதிக்கப்பட்ட மரத்தில் குலை சிறுத்தும், காய்கள் முதிர்ச்சி அடை யாமல் பிஞ்சிலே பழுத்தும் விடுகின்றன. இந்த நோயை பரப்பும் பூஞ்சாணம் மழை, பனித்துளிகள் மற்றும் காற்று மூலமாக விரைவில் பரவுகிறது. நெருக்கமான நடவு மண்ணில் அதிக களைகள், வடிகால் வசதியில்லாத மண், பனி மற்றும் மழை காலங்கள் போன்ற சூழ்நிலைகளில் இந்நோய் அதிகமாக பரவு கிறது. இந்நோயை கட்டுப் படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி அகற்றி தீ வைத்து அழிக்க வேண்டும். களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

    ஒரு மாத இடைவெளியில் லிட்டர் நீருக்கு கார்பன்டசிம் 1 கிராம் அல்லது லிட்டர் நீருக்கு பினோமில் 1 கிராம் அல்லது லிட்டர் நீருக்கு மான்கோசெப் 2 கிராம் அல்லது லிட்டர் நீருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராம் கலந்து ஒட்டும் திரவத்துடன் சேர்த்து இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

    இந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து வாழையில் சிகடோகா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற்றிடலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×