என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டம்
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை
- ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று பக்ரித் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் கழிந்த 2 ஆண்டுகளாக பள்ளி வாசல்களில் பக்ரித் பண்டி கை கூட்டு தொழுகை நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கொண்டாட்டங்களுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்
100-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல் களில் சிறப்பு கூட்டு தொழு கையுடன் பக்ரித் பண்டி கையானது கொண்டாடப்பட்டது.
அழகியமண்டபம், திருவி தாங்கோடு, குளச்சல், நாகர் கோவில், இளங்க டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் குடும்ப த்தினர்களுடன் கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.தவ்ஹீத் ஜமாத் சார்பில் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு பகுதியில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டதோடு ஒருவொ ருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக் களை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்