search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு - மீன் சந்தையையும் பார்வையிட்டார்
    X

    குளச்சல் பஸ் நிலையத்தில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு - மீன் சந்தையையும் பார்வையிட்டார்

    • அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களை பாது காக்கும் வகையில் தனியறை அமைத்து பதிவறை எழுத்தர் மூலம் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்
    • உரக்கிடங்கில் தயார் செய்யப்படும் உரத்தை எடை போட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டம், குளச்சல் நகராட் சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    குளச்சல் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் அரவிந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி வளாகத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களை பாது காக்கும் வகையில் தனியறை அமைத்து பதிவறை எழுத்தர் மூலம் பதிவேடுகளை பராமரிக்க வேண்டுமெனவும், வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டு மெனவும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் குளச்சல் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலுட்டும் அறையினை தினமும் சுத்தப் படுத்தி, திறந்து வைக்க வேண்டு மெனவும், நவீன படுத்த வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி னார்கள்.

    மேலும் காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தையினை ஆய்வு மேற்கொண்டு, அதன் தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துமாறு நக ராட்சி ஆணையர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து உரக்கிடங்கினை ஆய்வு மேற்கொண்டு, உரக்கிடங்கில் தயார் செய்யப்படும் உரத்தை எடை போட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    இந்நிகழ்ச்சியில், குளச்சல் நகராட்சி ஆணை யர் ஜீவா. நகராட்சி செயற் பொறியாளர்கள், பொறியாளர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×