search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள்
    X

    பேச்சிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் சான்றிதழ்கள் வழங்கியபோது எடுத்த படம் 

    குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள்

    • 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
    • முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    நாகர்கோவில்:

    2022-23-ம்ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்க ளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒருபகுதி யாக கலைப்பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்க ளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. கவின் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை, 4. நடனம், 5. நாடகம், 6. மொழித்திறன் என்னும் 6 தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1. கவின் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை – தோற்கருவி, 4. கருவி இசை துளைக்காற்றுக்கருவிகள், 5. கருவி இசை தந்தி கருவிகள், 6. இசை சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9 . மொழித்திறன், என்னும் 9 தலைப்புகளில் நடைபெறுகிறது.

    அதேபோல் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 1. காண் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை, தோற்கருவி, 4. கருவி இசை, துளைக்காற்றுக்கருவிகள், 5. கருவி இசை தந்தி கருவிகள், 6. இசை சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் என்னும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒருவர் ஏதேனும் 3 தனி போட்டி மற்றும் 2 குழு போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாண வர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் 2-ம் இடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டி களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் மற்றும் மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்ப டுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின் படி கலைத்திருவிழா போட்டிகள் நடை பெற உள்ளது. பள்ளி அளவில் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதிக்குள்ளும், வட்டார அளவில் 29-ந் தேதி முதல் 05-ந் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் 06-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள்ளும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இக்கலை திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×