search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு
    X

    ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
    • சமுதாய நிர்வாகிகள் 21-ந்தேதியான நேற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் இந்து நாடார் சமுதா]யத்திற்குட் பட்ட இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழி முப்பந்தல் (மேற்கு) பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களை இந்து நாடார் சமுதாயத்தின் சார்பில் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

    இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தும் நட வடிக்கையினை எடுத்தது. கடந்த 17-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோவில் (கிழக்கு) செயல் அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் (மேற்கு) நிர்வாக பொறுப்பு களை தற்போது பார்த்து வரும் சமுதாய நிர்வாகிகள் 21-ந்தேதியான நேற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து காலை மற்றும் இரவிலும் பொதுமக்கள் கோவிலில் குவியத்தொடங்கினர். இந்நிலையில் நேற்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் விவரங்களை கேட்டு அறிந்தார். பின்னர் சமுதாய நிர்வாகிகளுடன் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் (கிழக்கு) செயல் அலுவலர் பொன்னியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கைய கப்படுத்தும் நட வடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமுதாயத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதால் அதுவரை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    50 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ததற்கான ஆதாரங்களை செயல் அலுவலரிடம் ஒப்படைக்க சமுதாய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறுத்தி வைத்தது. உடன்பாடு ஏற்பட்டதால் பொது மக்களும், பக்தர்களும் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×