search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டாரில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருவட்டாரில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு
    • குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார்

    நாகர்கோவில் :

    திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார். திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதர்சன், குற்றியார் நிமால், தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவட்டார் பணிமனை செயலாளர் சதீஷ் வரவேற்றார். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், முன்னாள் பணிமனை செயலாளர் ரவீந்திரன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பணிமனை பொறுப்பு மேலாளர், பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் தாலுகாவிற்கு தண்ணீர் திறக்கப் பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×